ஆசைதீர அனுபவித்து விட்டு, பின் கணவன் செய்த காரியம்.! அதிர்ச்சியில் உறைந்த மனைவி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூரு விஜய நகர் அருகே சசிகுமார் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இந்த வாழ்வில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் சசிகுமார் தான்.

அந்த பெண்ணிடம் நீ அழகாக இல்லை. உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. எனக்கு விவாகரத்து வேண்டும் என்று அவருடைய மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். திருமணம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது இப்பொழுது வந்து நான் அழகாக இல்லை என்று கூறுவது தவறானது. விவாகரத்து எல்லாம் தர முடியாது என்று மனைவி தெரிவித்துள்ளார். 

இந்த சண்டையானது நாளுக்கு நாள் அதிகரிடுத்து வந்த நிலையில், உன்னை கொலை செய்துவிடுவேன், ஆசிட் வீசி விடுவேன் என்று கணவர் மிரட்டி இருக்கின்றார். 

சம்பவ தினத்தன்று விவாதம் முற்றவே ஹெல்மெட்டால் மனைவியின் தலையில் தாக்கி விட்டு சசிகுமார் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். பின்னர், அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சசிகுமாரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men cheated his wife in karnataka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->