மாமாக்கு கொரோனா.. இனிமே வரமாட்டேன்.. பதறிய மனைவி.. விசாரணையில் அம்பலமான திடுக்.!
men cheat his wife using corona name
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பகுதியைச் சேர்ந்த மணிஷ் மிஸ்ரா என்பவர் தனது மனைவிக்கு போன் செய்து தனக்கு கொரோனா என்றும், தான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றும் கூறி விட்டு உடனடியாக இணைப்பைத் துண்டித்து இருக்கின்றார்.
எனவே, பதறிப்போன அவரது மனைவி தனது கணவனுக்கு பல முறை கால் செய்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அழுது கொண்டே அவர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவன் காணவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவருடைய செல்போன் சிக்னல் கிடைத்த பகுதியைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்றபொழுது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.
தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவது கண்டறியப்பட்டது. கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க தனக்கு கொரோனா என்று கூறிவிட்டு மிஸ்ரா தலைமறைவான விஷயம் அம்பலமானது.
English Summary
men cheat his wife using corona name