இளம்பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய காமுகன்.. நடுரோட்டில் வைத்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.!!
MEN ATTACKED IN KARNATAKA
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள மலந்தூர் சாலை பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருபவர் சித்தார்த் (வயது 50). இவரது கடையில் இப்பகுதியை சார்ந்த இளம்பெண் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடையில் பணியாற்றி வந்த இளம்பெண்ணிற்கு சித்தார்த் தனது அலைபேசியில் இருந்து ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதனை கண்ட இளம்பெண் அதிர்ச்சியடைந்து, இது தொடர்பாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்து கடைக்கு சென்றுள்ளனர். கடையில் இருந்த சித்தார்த்தை கடைக்கு வெளியே சட்டையை பிடித்து இழுத்து வந்து அடித்து நொறுக்கினர். மேலும், மருத்து கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சித்தார்த்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து சித்தார்த்தை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
MEN ATTACKED IN KARNATAKA