லாட்ஜில் அறையெடுத்து தங்கிய காதலன் காதலி.! எட்டிப்பார்த்த ஊழியர் கண்ட காட்சி.!
Men and women Suicide in lodge room karnataka
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற 26 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் இருப்பவர்கள் எப்படியும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைத்துள்ளனர்.
ஆனால் இரு தரப்பு வீட்டினரும் இவர்களது காதலுக்கு மிகுந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எவ்வளவு பேசியும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால் மனமுடைந்த இவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர். இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி மைசூர் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் இவர்கள் இருவரும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.
நீண்ட நேரம் கதவு தட்டப்பட்டும் அவர்கள் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Men and women Suicide in lodge room karnataka