கள்ளச்சாராயம் குடித்த 2 வாலிபர்கள் கண் பார்வை இழந்து மரணம்..!
Mayiladuthurai Fake Liquor Drinks 2 youngsters Blind and Lost Live 30 May 2021
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சேந்தங்குடி பகுதியை சார்ந்தவர் செல்வம் மற்றும் பிரபு. இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். தற்போது ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இருவரும் மதுபானம் அருந்த வழியில்லாமல் விழிபிதுங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிரபு அங்குள்ள கிராமப்பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்த நிலையில், அதனை பிரபு மற்றும் செல்வம் ஆகியோர் சேர்ந்து அருந்தியுள்ளனர். கள்ளச்சாராயத்தை அருந்திய சில மணிநேரத்திற்கு உள்ளாகவே பிரபுக்கு கண்பார்வை பறிபோயுள்ளது.
இதனையடுத்து, உறவினர்கள் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸும் உறுதியாகியுள்ளது.
பின்னர், குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், செல்வம் திடீரென மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். இதனால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், செல்வத்திற்கும் கண்பார்வையை பறிபோய் பலியாகியுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Mayiladuthurai Fake Liquor Drinks 2 youngsters Blind and Lost Live 30 May 2021