மணமேடை..உற்சாகம்.. மாப்பிள்ளை செய்த காரியம்..! திருமணமே நின்று போன சம்பவம்..!
marriage stopped by girl
திருமணத்தின் போது வட மாநிலங்களில் நாகப் பாம்பைப் போல நடனம் ஆடுவது வழக்கம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மாப்பிள்ளை நடனம் ஆடியதால் திருமணமே நின்றுபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பரேலி என்ற பகுதியில் பாதியில் படிப்பை நிறுத்திய இளைஞருக்கும், டிப்ளமோ படித்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி திருமண ஏற்பாடுகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேடையில் புதுப்பெண் மற்றும் மாப்பிள்ளை இருந்துள்ளனர். மணமகனின் நண்பர்கள் அவரை நடனமாட அழைத்துள்ளனர். இதன் காரணமாக உற்சாகமடைந்த புதுமாப்பிள்ளை போதையில் தள்ளாடியபடி நாகினி நடனமாடியிருக்கின்றார்.
இதை பார்த்த மணமகள் அவர் போதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருமணத்தில் கூட போதையில் வருவதா என்று கேட்டு கோபமாக மாலையை கழட்டி வீசி இனிமேல் நீ எனக்கு வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த மணமகன் மணமகளை அறைந்துள்ளார்.
இதனால் திருமண வீடு ரணகளம் ஆனது. அதன் பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட சீர்வரிசை கொடுத்த மணமகள் வீட்டினர் அனைத்து பொருட்களையும் வாரி சுருட்டிக்கொண்டு பெண்ணை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.