திருமணத்திற்கு முன்பே மணமகனை அதை செய்ய சொல்லி தொந்தரவு செய்த மணமகள்.. தனி வீட்டில் மணமகன் செய்த வேலை.. அதிர்ச்சியில் உறவினர்கள்.!
marriage boy killed marriage girl
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் குர்பக்ஸ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த சரிதா(வயது 20). இவருக்கும் மன்டோஷ் (24 வயது) என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நான்கு நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.
சரிகா தனது அத்தை வீட்டில் இருந்து நர்சிங் வடித்து வருகிறார். சரிகா திருமணத்திற்காக ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக கடந்த 26ஆம் தேதியன்று மன்டோஷ் உடன் வெளியே சென்றுள்ளார். இரவு நேரமாகியும் சரிகா வீடு திரும்பவில்லை.
அடுத்த நாள் சரிகாவின் உடல் பக்கத்து ஊரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மன்டேஸ்ஷை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ராதாபுர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சரிகாவை அழைத்துச் சென்று அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சரிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் கூறினார்.
பின்னர் தனது சகோதரனுடன் சரிகாவின் உடலை பக்கத்து ஊரில் போட்டுவிட்டு சென்றுள்ளார். எதற்காக கொலை செய்தார் என்பதை விசாரித்தபோது, கல்லூரிக்கு சென்று வர ஸ்கூட்டி வாங்கித்தரும் சரிகா தன்னை தொல்லை செய்ததாகவும், சரிகா வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்ததாகவும் நான் சந்தேகத்தால் அவரை கொலை செய்து விட்டேன் என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
marriage boy killed marriage girl