திருமணத்திற்க்காக மணமகளை பணத்திற்கு வாங்கிச்செல்லும் அவலநிலை., வெளியான பகீர் தகவல்!!
marraige gilrls sale for money
ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காததால் மற்ற மாநிலங்களிலிருந்து பெண்களை விலைக்கு வாங்கி வந்து திருமணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
1980 மற்றும் 1990 களில் ஹரியானா மாநிலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகளவில் நடந்தன. அதன் விளைவாக தற்போது உள்ள அங்குள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மாநிலங்களில் உள்ள பெண்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் படிப்பு, குடும்ப சூழல், அழகு உள்ளிட்டவற்றிற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை பெண்னின் குடும்பத்திற்கு வழங்கி, அந்த பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்யும் சூழல் தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது.
சராசரியாக 35,000 ரூபாய் முதல் ரூ.1,50,000 ரூபாய்வரை பணம் கொடுக்கப்பட்டு பெண்கள் திருமணத்திற்கு தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால் இதனால் பணக்கார ஆண்களுக்கு திருமணம் முடிந்து விட்டாலும், வறுமையில் உள்ள ஏழை ஆண்களுக்கு பெண் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் பெண்கள் தட்டுப்பாடால் பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், ஒடிஸா, மத்தியப் பிரதேசம், நேபாளம் வரை பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை அவர்கள் குடுபத்துக்கு வரதட்சணைக் கொடுத்து வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது .
English Summary
marraige gilrls sale for money