அருமையான பிரதமரை நாடே இன்று எதிர்பார்க்கிறது - ராகுல் காந்தி...!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருக்கும் மன்மோகன் சிங் பிறந்த தினம் இன்று. இது அவருக்கு 88 ஆவது பிறந்தநாளாகும். இவரது பிறந்தநாளையொட்டி பல அரசியல் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையில் நடைபெற்ற கடந்த 2004 ஆம் வருடத்தில் முதல் 2014 ஆம் வருடம் வரையிலான ஆட்சிக்காலத்தில், இந்தியாவின் 13 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்து வந்தார். 

கடந்த 1932 ஆம் வருடத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி மன்மோகன் சிங் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த நிலையில், பஞ்சாப் மாநில பல்கலை. மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலை., ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பயின்று பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

இந்நிலையில், இவரது பிறந்தநாளிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ராகுல் காந்தி, " மன்மோகன் சிங் போல உள்ள பிரதமர், இப்போது ஆட்சியில் இல்லாததை இந்தியா உணர்த்துவதாகவும், அவர் நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நமக்கு உத்வேகம் " என்றும் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manmohan Singh greeting told by Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->