VIDEO: நடந்து சென்றவரை கட்டையால் தலையில் ஒரே அடி! சுருண்டு விழுந்த நபர்! பதபதக்கவைத்த வீடியோ!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் அமைந்துள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஒரு நபர் சாலையில் நடந்து கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே வந்த மற்றொரு நபர் திடீரென்று கட்டையால் தலையில் அடித்துள்ளார்.

இதனால் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இருந்த போதிலும் மீண்டும் கட்டை கொண்டு அந்த நபரை தாக்கிய வண்ணம் உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை தடுப்பதற்குள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  

பின்னர் காயமடைந்த நபரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் கட்டையால் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த காட்சி அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இதில் காயமடைந்த நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பது தெரியவந்தது. மேலும் எதற்காக ரவீந்தரை அந்த நபர் தாக்கினார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man attacked by another person in telangana


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->