2 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன் கைது..!! - Seithipunal
Seithipunal


2 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

பீகாரை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி அருகில் உள்ள குருகிராமுக்கு குடிபெயர்ந்தார். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 28 தேதி அப்பெண்ணின் முன்னாள் கணவன் அந்த பென்ணின் வீட்டிற்கு வந்து அவரை வெளியே தள்ளிவிட்டு தனது இரண்டு வயது மகளுடன் தனியே சென்றூ அறையை பூட்டி கொண்டார். எவ்வளவு தட்டியும் அறையை திறக்காததால் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெண் திகைத்துள்ளார் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர் நான் இங்கு வந்ததை பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளார். உள்ளே சென்று அந்த பெண் பார்த்த போது அவரின் மகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து தனது புதிய கணவரிடம் அந்த பெண் கூற அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து அவனை கைது செய்தது காவல்துறை.

பெற்ற மகளை தந்தையே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for raping his Own 2 year baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->