மாமல்லபுரத்தில் கரையொதுக்கிய போதை பொருட்கள்.. எவ்வுளவு மதிப்பு தெரியுமா?..!!
Mamallapuram, or Mahabalipuram drugs secluded in sea shore police investigate
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் பேரல் ஒன்று மிதந்து வந்து கரை ஒதுங்கியது. இந்த பேரலில் இருந்த பொருட்களில் சீன எழுத்துக்களால் எழுதியது போல பாக்கெட்டுகள் மற்றும் சிறிய அளவிலான டப்பாக்கள் அதிகளவு இருந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மிதந்து வந்து கரையொதுங்கிய பொருட்களை கைப்பற்றினர்.
துவக்கத்திலேயே இது போதை பொருளாக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல் துறையினர், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடற்கரையில் மிதந்து வந்த பொருட்கள் போதை பொருட்கள் தான் என்பதும், இதன் மதிப்பு ரூ.230 கோடி என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போதைப்பொருள் எங்கிருந்து, எப்படி வந்தது என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Mamallapuram, or Mahabalipuram drugs secluded in sea shore police investigate