பப்பாளி லோடு ஏற்றிச்சென்ற லாரி.. தறிகெட்டு இயங்கி அரங்கேறிய சோகம்.. 16 பேர் துடிதுடிக்க பலி.! - Seithipunal
Seithipunal


பப்பாளி பழங்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில், 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில், பப்பாளி லோடு ஏற்றிச் சென்ற லாரி அங்குள்ள கிங்காவோன் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்துள்ளது. இதன்போது, அங்கு உள்ள கோவிலுக்கு அருகே லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே  பலியாகினர். மேலும், 5 பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Truck Accident Police Investigation 16 Died 15 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->