கொரோனா பீதியிலும், தெரு நாய்களுக்காக சகோதரிகள் செய்த காரியம்.! குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


சமூகத்திலிருந்து விலகி இருத்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். 

இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றுவதை தவிர்க்கும் பொருட்டு ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். 

ஒரு சிலர் மட்டும் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அங்குமிங்கும் சுற்றி திரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பல தெரு நாய்கள் உணவு இன்றி தவித்து வருகின்றன.

அவைகளுக்கு உணவு தரும் பொருட்டு காஜல், திஷா ஆகிய பெண்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு வருவது, பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகின்றது.

இதுகுறித்து அவர்கள், "மனிதர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும். 

ஆனால், நாய்கள் என்ன செய்யும்..? எனவேதான் அவைகளின் பசியறிந்து நாங்கள் உதவ வந்தோம்." என்று தெரிவித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra sisters helps to dog


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->