மேலும் 150 பேருக்கு கொரோனா! 1000 த்தை கடந்த சோகம்!
Maharashtra reached 1000 more corona patients
மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் ஆயிரத்தை கடந்த முதல் மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் இருக்கின்றது.
ஆரம்பம் முதலே தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது இன்று மட்டும் 150 பேருக்கு இந்த மாநிலத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1018 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாநிலத்தில் அதிகபட்சமாக 50 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நாட்டிலேயே அதிகமானோரை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிய மாநிலமும் இந்த மாநிலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த மாநிலத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
English Summary
Maharashtra reached 1000 more corona patients