கணவன், பெண் பிள்ளைகளை தவிக்கவிட்டு, ஆண் குழந்தையுடன் கள்ளக்காதனை அழைத்து எஸ் ஆன பெண்மணி.!
Maharashtra Mumbai Woman Missing With 5 Year Child and got Escape with Affair Man
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சாக்கினக்கா பகுதியை சார்ந்த பெண்மணி தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பெண்ணின் கணவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண்ணின் கணவர், ஷீரடியில் நடைபெற்ற உறவினரின் திருமண இல்லத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர்.
திருமண விழாவை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வருகையில் வீட்டில் பெண் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். மேலும், மனைவி மற்றும் 5 வயது ஆண் குழந்தை இல்லாததை கண்டு, பெண் குழந்தைகளிடம் அம்மா மற்றும் தம்பி எங்கே என்று கேட்டுள்ளார்.
இதன்போது, தாய் தம்பியுடன் வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்கையில், அவரின் மனைவி தனது மகனுடன் கல்யாண் பகுதியை சார்ந்த கள்ளக்காதலனுடன் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மனைவியை அவருக்கு தெரிந்த மற்றும் விசாரித்த பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கள்ளகாதல் ஜோடி மற்றும் 5 வயது குழந்தையை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra Mumbai Woman Missing With 5 Year Child and got Escape with Affair Man