திருமணம் செய்வான் என்ற நம்பிக்கை... கொலை செய்து, உடலை சுவற்றில் 3 மாதம் மறைத்த கொடூரன்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாலகர் பகுதியை சார்ந்த பெண்மணி அமிதா (வயது 32). இவரின் காதலர் சூரஜ் (வயது 35). இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடமாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, பெண்ணை காதலை கைவிடக்கூறி பெற்றோர்கள் தெரிவிக்கவே, காதலனுடன் கரம் கோர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக பெண்மணி தனது காதலர் சூரஜுடன் வீட்டினை விட்டு வெளியேறியுள்ளார். 

இதன்பின்னர், இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில், காதலனை திருமணம் செய்ய கூறி பெண்மணி வற்புறுத்தியுள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன், லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த தகராறால், சம்பவத்தன்று ஆத்திரமடைந்த காதலன் பெண்ணை கொலை செய்து, குளியலறை அருகே மற்றொரு சுவரை எழுப்பி உடலை மறைத்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே பெண்மணி கொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணின் சகோதரர் தற்போது அளித்த புகாரில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் உண்மை தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூரஜை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், காதல் போர்வையில் ஏமார்ந்து, காதலனுடன் சென்ற ஒரே மாதத்தில் பெண் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Mumbai Palghar girl Discovered Wall When his Boy Friend Murder after 3 Months


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->