கொரோனவால் உயிரிழந்த மருத்துவரின் இறுதி முகநூல் பதிவு.. முக்கிய கோரிக்கை.! சோகத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை காசநோய் அரசு மருத்துவமனையில், சீனியர் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் மருத்துவர் மனிஷா ஜாதவ் (வயது 51). இவருக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என சந்தேகித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவர் மனிஷா ஜாதவ் உயிரிழக்கவே, அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மரணத்திற்கு முன்னர் மருத்துவர் மனிஷா முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். 

இது தொடர்பான பதிவில், " நான் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறேன். எனது கடைசி மற்றும் இறுதி காலை வணக்கத்தை உங்களிடம் தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன். நான் உங்களை இனி சந்திக்க இயலாது. அனைவரும் கவனமாக இருங்கள். எனது உடலுக்கு மட்டுமே அழிவு, எனது ஆன்மா அழியாது " என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும், பலரும் மருத்துவர் மனிஷா ஜனதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Mumbai Doctor Manisha Jadhav Died Corona Facebook Last Post Go Viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->