ஒரே ஜாதி, உட்பிரிவில் இருந்தும் காதலுக்கு எதிர்ப்பு.. மயானத்தில் நடந்த சடலத்திருமணம்..! ஒரே குழியில் நல்லடக்கம்.!! - Seithipunal
Seithipunal


சொந்த ஜாதிக்குள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி தற்கொலை செய்த சோகமும், கல்லறையில் சடலத்துக்கு திருமணம் செய்து உடலை நல்லடக்கம் செய்த நெகிழ்ச்சியும் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கோன் மாவட்டத்தின் வேட் கிராமத்தில், கடந்த 1 ஆம் தேதி மரத்தில் இளம் வயதுள்ள ஆண் மற்றும் பெண் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரிக்கையில், காதல் ஜோடி திருமணம் செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்தது அம்பலமானது.

அங்குள்ள பால்த் கிராமத்தை சார்ந்த முகேஷ் சோனாவானே (வயது 22), நேஹா தாக்கரே (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்து பெற்றோர்களிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். காதலன் தனது பெற்றோரிடம் விருப்பத்தை தெரிவித்து, நேஹாவை பெண் கேட்க கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவை கொண்டவர்கள் ஆவார்கள். 

அவர்களின் சமுதாய வழக்கப்படி ஒரே உட்பிரிவை சார்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்பதால் இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நாம் சேர வாய்ப்பில்லை என்று நினைத்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது. பிள்ளைகளின் தற்கொலை இருதரப்பு பெற்றோரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கிய நிலையில், மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமண சடங்குகள் செய்யப்பட்டு ஒரே குழியில் வைத்து நல்லடக்கம் செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Love Couple Suicide due to Parents Opp to his Love Marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->