மஹாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி.!
Maharashtra governor affected covid positive
மஹாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மஹாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டுள்ளார். மஹாராஷ்ட்ராவில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Maharashtra governor affected covid positive