தடம் மாறி, தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து.. பரிதாபமாக பலியான உயிர்கள்.!!
Maharashtra bus accident 2 men died
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் போரிவிலி பகுதியில் இருந்து பொய்சர் நோக்கி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சொந்தமான அரசு போக்குவரத்துக் கழக பேருந்து, அத்தியாவசிய பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தில் டிரைவர், கண்டக்டர் உட்பட 5 பேர் பயணம் செய்த நிலையில், பால்கர் மாவட்டம் மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில், மனோர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்து பயணம் செய்துள்ளது.
அங்கு திடீரென திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்புற சாலையினை நோக்கி பயணித்து, எதிரே வந்த ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில், பேருந்தும் - வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், வேனில் இருந்த கேஸ் வெடித்துள்ளது.
இந்த துயர சம்பவத்தில் ஆம்னி வேனில் இருந்த அஜித் ஜித்தேஷ், பர்பாஜ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும், பேருந்தில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra bus accident 2 men died