குழந்தைக்கு இனிப்பு வாங்க ரூ.5 கேட்டதால் ஆத்திரம்.. 20 மாத குழந்தை தந்தையால் அடித்து கொலை.! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு இனிப்பு பொருட்கள் வாங்க ரூ.5 மனைவி கேட்டதால், ஆத்திரமடைந்த தந்தை 20 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோந்தியா லோனாரா கிராமத்தை சார்ந்தவர் விவேக் வுயிக். இவர், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், விவேக்கின் மனைவி வர்ஷா 20 மாத குழந்தை அழுதுகொண்டு இருப்பதாகவும், சுவீட் வாங்க ரூ.5 தருமாறும் கேட்டுள்ளார். 

இதற்கு, தன்னிடம் சில்லறை இல்லை என விவேக் கூறவே, குழந்தை அழுது இடம்பிடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் விவேக் பச்சிளம் குழந்தை என்றும் பாராது, பலமுறை வேகமாக கதவில் அடித்துள்ளான். இதனை தடுக்க முயன்ற வர்ஷாவையும் படிக்கட்டில் தள்ளிவிட்டுள்ளான்.

பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை மீட்ட வர்ஷா, மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வர்ஷா காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடந்து, விவேக்கை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra baby Murder by Father 6 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->