#மதுரை: 15 வயது சிறுமியை ஏமாற்றி அத்துமீறிய காமுகன்.. பயிற்சியாளன் என்ற பெயரில் போக்கிரி நாடகக்காதலன்.!! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்திய காமுக பயிற்சியாளர், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்ஸோ வழக்கில் கைதாகியுள்ளார். 

மதுரையில் உள்ள தெப்பகுளம் நரசிம்மபுரம் காமராஜர் சாலை பகுதியைச் சார்ந்தவர் பிரசன்னகுமார். இவர் அவனியாபுரம் அருகே இருக்கும் தனியார் பூப்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது வீட்டிலேயே வசித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பூப்பந்தாட்ட பயிற்சி வழங்குவதாக கூறி நெருங்கி பழகி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னதாக பயிற்சியாளர் பிரசன்ன குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்து, மாணவியை அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு மிரட்டி வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். 

இதனால் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு சந்தேகமடைந்த தாயார், சிறுமியிடம் விசாரிக்கையில் பூப்பந்தாட்ட பயிற்சியாளர் என்ற காமுகன் தன்னை காதலித்து ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து, பின்னர் மிரட்டி அதனை வற்புறுத்தி தொடர்ச்சியாக அரங்கேற்றிய துயரம் குறித்து கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் பிரசன்ன குமாரின் வீட்டாரிடம் சென்று மகளின் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக நியாயம் கேட்கவே, அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது., எதுவென்றாலும் அவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கொடூரனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மதுரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி இதுதொடர்பான விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில், பிரசன்னகுமார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தவறாக நடந்து ஒப்புக்கொள்ளவே, அவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

பிரசன்னகுமார் திரைப்படத்தில் வரும் காதல் காட்சியை போன்று மாணவியின் தலைமுடி, செருப்பு, சாப்பிட்டுவிட்டு போட்ட ஐஸ்கிரீம் கப் போன்றவற்றையும் எடுத்து (சூனியம் வைக்கவோ?) தனது அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளார். மேலும், மாணவியின் பெயரை தனது மார்பில் பச்சை குத்தியும் வாழ்ந்து நிலையில், போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார். 

மாணவியை உண்மையில் காதலித்து இருந்தால், காதலில் காமம் இல்லை என்று முட்டுக்கொடுத்து முதலில் நல்லவன் போல பேசி பின்னர் சிறுமியிடம் அத்துமீறுவது எப்படிப்பட்டது?. இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக இருப்பது முதலில் ஆசைவார்த்தை கூறி அத்துமீறிவிட்டு, பின்னர் ஏன்? மிரட்டல் விடுத்தது அழைத்து அத்துமீற வேண்டும்?. இதுபோன்ற சம்பவங்களை பார்த்து சிறுமிகள் சுதாரித்து செய்யப்படவில்லை எனில் நாளை உங்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதே நிதர்சனம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Sports Trainer Arrest 15 Aged Child Sexual Abuse 17 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->