அதிமுக தொழிற்சங்க தேர்தலில் நிர்வாகிகள் இடையே மோதல்.. மதுரையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக தொழிற்சங்க தேர்தலில் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. 

மதுரையில் உள்ள பழங்காநத்தம் அதிமுக அலுவலகத்தில், அதிமுக தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. இதன்போது, இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. மதுரை செக்கானூரணி போக்குவரத்து பணிமனையில் கிளை செயலாளராக முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அதிமுக தொழிற்சங்க தேர்தலில் செக்கானூரணி போக்குவரத்து பணிமனை கிளை செயலாளராக முருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு, மற்றொரு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மற்றொரு தரப்பு முருகன் எப்படி கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம்? என எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளது. 

இதனையடுத்து, இருதரப்பும் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபடவே, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா தொழிற்சங்க பணியிடங்கள் தேர்தல் இறுதியில் சண்டையில் நிறைவு பெற்றுள்ளது. இந்த சண்டை சம்பவம் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே அலுவலகத்திற்குள் நடந்துள்ளது. 

காவல் துறையினர் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இருதரப்பும் அமைதியாக சென்றது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai AIADMK Party Supporters Fight 18 Sep 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->