5 ரூபாய்காக 12 மணிநேரம் சிகிச்சை அளிக்க மறுத்த கொடூரம்.. பரிதாபமாக பறிபோன உயிர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தின் அசோக் நகர் பகுதியை சார்ந்தவர் சுனில் டேக்காட். இவர் நீண்ட நாட்களாக காச நோயால் அவதியுற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள குணாப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சுனிலை, அவரது மனைவி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த பணியாளர்கள், நோயாளியை மருத்துவமனையில் அனுமதி செய்ய ரூ.5 செலுத்தி அனுமதி சீட்டு வாங்க வேண்டும் என்று கூறிய நிலையில், கணவனின் உடல்நிலையை எண்ணி கையில் பணம் கூட எடுக்காமல் வந்துள்ளார். மேலும், வீட்டில் இருந்து உறவினர்களை வரச்சொல்லி பணம் தருவதாகவும், இப்போது எனது கணவரை காப்பாற்றுமாறும் மன்றாடி கேட்டுள்ளார்.

ஆனால் கணவரை அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கிட்டத்தட்ட 12 மணிநேரம் அவசர ஊர்தியிலேயே காத்திருந்து வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்த தகவல் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh man died due to irresponsible hospital members


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->