ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மகனை தேடி, தினமும் ஆற்றங்கரைக்கு வரும் தந்தை.. வெளியான கண்ணீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சார்ந்தவர் கமல் சிங் (வயது 60). இவரது மகன் ஹிமான்ஷு (வயது 28). இவர் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். 

அந்த சமயத்தில், மழை வெள்ளம் காரணமாக ஆற்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். மேலும், அங்கிருந்தவர்கள் வெள்ளம் குறித்து எச்சரித்தும், அவர் அதனை கேட்காது சென்றுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த கமல் சிங் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். 

ஹிமான்சுவின் உடலும் கிடைக்காமல், அவரது இருசக்கர வாகனம் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், கமல் சிங் தனது மகனின் புகைப்பதுடன் அந்த ஆற்றங்கரையோரத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு சென்று தனது மகனை தேடி வருகிறார். கமல் சிங்கின் மகள் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், ஹிமான்சுவின் நிலை இன்றுவரை தெரியவில்லை என்பதே இதில் பெரும் சோகம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Father Daily visit son missing and floated in River Flood


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->