உருகி உருகி காதலித்த காதல் ஜோடி.. அழுகிய நிலையில்  சடலமாக கிடந்த பின்னணி..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த அபிஜித் மோகன்(25), ஸ்ரீ லட்சுமி (21) இவர்கள் இருவரும் பெங்களூரில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார்கள்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்களின் காதலை அவர்களது வீட்டில் ஏற்க மறுத்தார்கள். இதன் காரணமாக இருவரும் பெற்றோர்களிடம் கடந்த அக்டோபர் மாதம் முதல் பேசவில்லை என்று தெரிகிறது. 

இதை தொடர்ந்து, இருவரும் அவர்கள் குடும்பத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாதவண்ணம் இருந்திருக்கிறார்கள். இதனால், இரு வீட்டாரின் பெற்றோரும், இருவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். 

அந்த புகாரின் பேரில், விசாரித்த போலீஸார், சமீபத்தில் இருவரின் சடலத்தையும் அழுகிய நிலையில் மீட்டுள்ளனர். இதை தொடர்ந்து, நடத்த பட்ட விசாரணையில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lovers suicide in kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->