லவ்வா பண்றீங்க லவ்வு... கொடுமையாக தண்டிக்கப்பட்ட காதல் ஜோடிகள்..! கிராமவாசிகளின் மனிதாபிமானமற்ற செயல்..!
lovers attacked by village people
பிஹார் மாநிலத்தில் உள்ள சபால் என்னும் மாவட்டத்தில் இளம் தம்பதியினர் காதல் செய்ததற்காக, தீவிரவாதிகள் பாணியில் மிகவும் கொடுமையாக அவமதிக்கப்பட்டார்கள். மேலும், கொடூரமாக தாக்கப்பட்டார்கள்.
சபால் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனை ரகசியமாக சந்தித்த காரணத்தினால், அக்கிராமவாசிகள் அந்த இளம்பெண்ணை கையும் களவுமாக பிடித்த போது, இவர்களது காதல் கிராமத்திற்கு தெரியவந்தது. அவரது காதலரான ரமேஷ் மண்டலை சந்தித்து பேச ரகசியமாக அழைத்ததாக கிராமவாசிகள் கூறுகிறார்கள்.
கிராமவாசிகள் அவர்கள் இருவரையும் பிடித்து, பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் முன் நிறுத்தினார்கள். அங்கிருந்தவர்கள் அந்த காதல் தம்பதியினரை கரும்பு கட்டையால் ஈவிரக்கமின்றி சரமாரியாக அடித்தார்கள். மேலும் இந்த தம்பதியினரை மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் கொடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
மேலும் இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட சர்பஞ்ச், சம்பனகர் கிராமத்தில் வசிக்கும் மகேந்திர சர்தார் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவம் இந்த கிராமத்தில் நடப்பது முதல் தடவை அல்ல. இதற்குமுன் 2018 ஆம் ஆண்டிலும் இதேபோல் ஒரு காதல் ஜோடியை மிகவும் கேவலமான முறையில் தண்டிதந்தார்கள். கிராமவாசிகளுக்கு முன்பு அவரது காதுகளை பிடித்து கிராம பஞ்சாயத்து இடத்திற்கு இழுத்துச் சென்று திறந்த மைதானத்தில் அவர்களது எச்சிலை நக்க வைத்து கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள்.
English Summary
lovers attacked by village people