கேரளாவில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மலயாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு ஸ்ரீராஜ்(22), ஸ்ரீஜித் (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது செம்பிசேரி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருவரும் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில் ஸ்ரீராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த ஸ்ரீஜீத்தை மீட்டு சிகிச்சைக்காக அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஸ்ரீராஜீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry twowheeler accident in Kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->