மேலும், ஊரடங்கு நீட்டிப்பு.! கைமீறும் கொரோனா பாதிப்புகளால் திணறும் அரசு.!
lockdown extentended on may 17 in delhi
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இத்தகைய நிலையில் தலைநகர் டெல்லியில் பாதிப்பு மிக அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தகைய நிலையில், டெல்லியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டெல்லியில் பொது ஊரடங்கு அமலில் இருக்கின்றதால் 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்களை அரசே இலவசமாக வழங்குவதாகவும், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கும் மாதம் ரூ.5000 உதவி தொகையாக வழங்குவதாகவும் அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார்.
இத்தகைய சூழலில், டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன் படி மீ 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
English Summary
lockdown extentended on may 17 in delhi