சரக்கு வாங்க முண்டியடித்து குவிந்த குடிமகன்கள்.. திணறிப்போன ஒயின் ஷாப்... வைரல் காணொளி காட்சிகள்.!!
Liquor shops open in some states peoples buy liquor
கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க இந்தியா முழுவதும் நாடுதழுவிய ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மூன்றாவதாக மே மாதம் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலத்தின் வசதிக்கேற்ப சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா மற்றும் கோவா போன்ற மாநிலத்தில் சுமார் 47 நாட்களுக்கு பின்னர் மதுபானக்கடைகள் திறந்துள்ளது. மேலும், கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் திறக்கப்படும் செய்தியை அறிந்த மதுபிரியர்கள் பெரும் உற்சாகத்திற்கு உள்ளாகவே, ஊரடங்கின் காரணமாக மது இல்லாமல் தவித்து வந்த குடிமகன்கள், கடைகள் திறப்பதற்கு முன்னதாகவே மதுபானம் வாங்க கடைகளில் குவிய துவங்கி, கடைகள் திறந்ததும் ஜோரான விற்பனை நடைபெற்றுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Liquor shops open in some states peoples buy liquor