நள்ளிரவில் சிங்கங்கள் செய்த காரியம்..! அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் குஜராத் மாநிலத்தில், நள்ளிரவு 7 சிங்கங்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலையில் நடந்து சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

அந்த மாநிலத்தின் ஜூனாகத் நகரில் கிர்னார் என்ற விலங்கியல் பூங்கா இருக்கிறது. அண்மையில் பூங்காவிலிருந்து வெளியேறிய 7 சிங்கங்கள், வீடுகள் நிறைந்த தலேட்டி சாலையில் வீரநடை போட்டு நடந்து திரிந்துள்ளது. இதனை எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்து பார்த்த ஒருவர், அதை வீடியோ எடுத்து வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

சிங்கங்கள் ராஜநடையிட்டு செல்வதை கண்டு அச்சமடைந்த வலைதள வாசிகள் பலரும், தங்களது அதிர்ச்சியை பதிவிட்டும், அவ்வூர் ஊர் மக்களை எச்சரித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த வனத்துறை அதிகாரிகள், சிங்கங்கள் ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையானது தான் என்றும், இதற்கு முன் பல முறை இதுபோல் விலங்குகள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால், நள்ளிரவு விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பின்னர் மீண்டும் வனத்துக்கு திரும்பிவிடும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lions on road in gujarat


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->