கூட்டத்தின் நடுவே புகுந்த சிங்கம்.. அலறியடித்து ஓடிய இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள மடவப்பூர் என்னும் கிராமத்தில் மக்கள் கூட்டத்தின் நடுவே பெண் சிங்கம் ஒன்று ஓடிய  வீடியோ காட்சி இணையத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 இந்திய வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பெண் சிங்கம் ஒன்று வேகமாக அவர்களை கடந்து ஓடியது. 

சிங்கம் தங்களை நோக்கி வருவதைப் பார்த்து இளைஞர்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 7 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lion running video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->