பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர்... பெங்களூரு அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


வழக்கறிஞர் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்து வருபவர் ராஜசேகர் ரெட்டி.  இவர் நேற்றிரவு ஆனேக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை மறித்த மர்ம நபர்கள் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டினர்.

இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lawyer hacked to death in public


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->