சீன படையை எதிர்கொள்ள கடும் குளிரிலும் காத்திருக்கும் இந்திய இராணுவம்.!
Ladakh Indian Army
லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தற்போது நிலவி வரும் கடும் குளிரில் சீன படையினரின் அத்துமீறலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய படையினர் நிலைகொண்டுள்ளனர்.
அண்டார்டிகா போன்ற பகுதிகளில் நிலவும் உறைநிலைக்கும் கீழுள்ள ஜீதோஷ்ன நிலையானது தற்போது லடாக் எல்லை பகுதியில் நிலவி வருகிறது. இந்த கடுமையான குளிரிலும் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் தங்களை நிலைநிறுத்தியுள்ளது.
சீன இராணுவத்தின் அத்துமீறலை கண்காணித்து தவிடுபிடியாக்க, இந்திய இராணுவமும் கடுமையான குளிரை எதிர்கொண்டு எல்லையில் முகாமிட்டுள்ளனர். மேலும், சீன படையினரை எதிர்கொள்ள முழு தைரியத்துடன் நாங்கள் இருக்கிறோம் என்றும் இராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil