குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தனது உடல் உறுப்புகளை விற்பனை செய்ய தயாரான தாய்..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியை சார்ந்த பெண்மணி சாந்தி. இவர் தனது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், கடனை அடைக்கவும் தனது உடல் உறுப்புக்கள் விற்பனைக்கு என்று எழுதிய பதாகையை வைத்துள்ளார். மேலும், சாந்தியின் மூத்த மகன் இரண்டு பேர் விபத்தில் பலியான நிலையில், அவரது மகளும் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதனால் அவரின் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாந்தி இம்முடிவை எடுத்துள்ளார். கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் பெண்மணி, தற்போது வருமானம் இல்லாமல் வாடகை கூட செலுத்த வழி இல்லாமல் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகிறார்.

மூன்று மகள்களும் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டதன் காரணமாக பணிகளுக்கு செல்ல இயலாமல், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக சாந்தி தெரிவித்துள்ளார். மேலும், எனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு யாரேனும் உதவி செய்ய முன்வாருங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Woman Santhi Make Sale to Organ for his Child Future


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->