அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தை பிரசவம்... மருத்துவர்கள் இல்லா அரசு மருத்துவமனை.!
Kerala Trissur Woman Delivery baby at Govt Hospital Toilet
அரசு மருத்துவமனையின் கழிவறையில் பெண்மணி குழந்தையை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் உள்ள திருச்சூர் குன்னமங்கலம் பகுதியை சார்ந்தவர் பிரவீன். ப்ரவீனுக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ள நிலையில், அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட காரணத்தால் உறவினர்கள் குன்னமங்கலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் பெண்மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனை வார்டில் அனுமதி செய்துள்ளனர். மருத்துவமனையில் இருக்கையில் பெண்மை கழிவறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. கழிவறைக்குள் இருந்த பெண்மணி பிரசவ வலியால் அலறித்துடிக்கவே, பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள் சத்தம் கேட்டு உள்ளே சென்றுள்ளனர்.
இதன்பின்னர், பெண்மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக அவரை அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெண்ணின் உறவினர்கள் இது தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக குன்னமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் தலைமையில் விசாரணையும் தொடங்கியுள்ளது. மருத்துவமனையில் பிரசவத்திற்கு சென்று பெண்மணி மருத்துவர்கள் இல்லாமல் கழிவறையில் குழந்தை பெற்று, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala Trissur Woman Delivery baby at Govt Hospital Toilet