பேசிக்கொண்டு இருந்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, தற்கொலைக்கு தூண்டிய கொடூர கூட்டம்.!
Kerala Thiruvananthapuram girl Suicide due to Area Peoples Doubt About Affair
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பாறசாலை நரியூர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி அக்ஷ்ரா (வயது 36). இவர் அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்த அக்ஷ்ரா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அதன்போது, நிதி நிறுவனம் நடத்தி வந்தவர், பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக பேசுவதற்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டிற்குள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நிலையில், இதனை அப்பகுதியை சார்ந்த விஷ்ணு, சதீஷ், மணிகண்டன், ரஞ்சித் ஆகியோர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, இர்வருக்கும் முறையற்ற தொடர்பு இருப்பதாக மனதில் கற்பனை செய்த கொடூரர்கள், வீட்டினை வெளிப்புறமாக பூட்டி வைத்துவிட்டு அக்ஷ்ராவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்த உறவினர்கள் நிதி நிறுவன உரிமையாளர்களை வெளியே வரச்சொல்லி தகராறு செய்துள்ளனர்.
காமுகர்கள் விஷ்ணு, சதீஷ், மணிகண்டன், ரஞ்சித் ஆகியோர் செயல்களால் மனவேதனைக்கு உள்ளாகிய அக்ஷ்ரா, அவமானமடைந்து கைகளை கத்தியால் வெட்டி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துள்ளார்.
உயிருக்கு போராடிய அக்ஷ்ராவை மீட்ட உறவினர்கள் அங்குள்ள பாறசாலை மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, காவல் துறையினர் விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது. இதனையடுத்து, மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கொடூரர்கள் விஷ்ணு, சதீஷ், மணிகண்டன், ரஞ்சித் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Thiruvananthapuram girl Suicide due to Area Peoples Doubt About Affair