குடும்பத்தினர் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த தம்பதி.. சாலையில் கதறியழுத குழந்தைகள்..!
Kerala Thiruvananthapuram Couple Died Accident In Front of Family Members and Children
மருந்தகத்தில் மருந்து வாங்க சென்ற தம்பதி, குடும்பத்தினர் கண்முன்னே விபத்தில் சிக்கி உயிரிழந்த பெருந்துயரம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் கொட்டியம், மைலக்காடு பகுதியை சார்ந்தவர் டேனியல். இவரது மனைவி நிர்மலா. இவர்களின் பூர்வீகம் கொல்லம் ஆகும். பணி நிமித்தம் காரணமாக திருவனந்தபுரம் மைலக்காடு பகுதியில் வீடு வாங்கி வசித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் பணியாற்றி வந்த டேனியல், அங்கு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு சமயத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதியுற்றுள்ளார். இதனையடுத்து, அவர் அங்கு சிகிச்சை பெற்று உடல்நலம் சரியானதும், சொந்த ஊருக்கு வந்து செல்லலாம் என எண்ணி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஊருக்கு வந்துள்ளார்.
மேலும், திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றிருந்த டேனியல், தனது மனைவி நிர்மலா, மகள்கள், உறவினருடன் காரில் இல்லத்திற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
இதன்போது, அங்குள்ள மருந்தகத்தில் மருந்துகள் வாங்குவதற்கு காரை நிறுத்திய டேனியல், எதிர்புறத்தில் உள்ள மருந்தகத்திற்கு தனது மனைவி நிர்மலாவுடன் சென்றுள்ளார். மருந்தை வாங்கிவிட்டு தம்பதிகள் சாலையை கடக்க, காரில் இருந்த குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் சாலையை கடந்துகொண்டு இருந்த தம்பதிகள் மீது அதிவேகத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில், தம்பதிகள் இருவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் மட்டும் சாலையோரம் மோதி விழுந்துள்ளது. வாகனத்தை இயக்கி வந்தவர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தை நேரில் கண்ட குடும்பத்தினர் டேனியல் - நிர்மலாவின் உடலருகே கதறியழுதது காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala Thiruvananthapuram Couple Died Accident In Front of Family Members and Children