4 ஆம் வகுப்பு சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுக ஆசிரியன் கொடூரம்.. பெற்றோரின் விசாரணையில் வெளியான அதிர்ச்சி.!!
Kerala teacher child sexual abuse police arrest and investigation
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பானூர். இந்த ஊரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவரின் பெயர் பத்மராஜன் (வயது 45). இவனது வகுப்பறையில் நான்காம் வகுப்பு மாணவி பயின்று வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று காமுகன் சிறுமியை வகுப்பறையில் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனை பயன்படுத்தியே சிறுமியை பலமுறை சீரழித்து வந்துள்ளான்.
மாணவி இது குறித்து யாரிடமும் கூறாது வலியுடன் அவதிப்பட்டு வந்த நிலையில், மனநலம் பாதித்தது போல மாறியுள்ளார். மகளின் நிலையை கண்டு நிலைகுலைந்த பெற்றோர் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியரின் காமுகம் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காமுக ஆசிரியர் பத்மநாபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala teacher child sexual abuse police arrest and investigation