கேரள காதல் ஜோடி தமிழக எல்லையில் தற்கொலை முயற்சி.. பெண்ணுக்கு சிகிச்சை, காதலன் பலி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள இடுக்கி மறையூர் பகுதியை சார்ந்தவர் நிகிலா. இவர் ஆசிரியையாக இருந்து வருகிறார். அங்குள்ள பெரும்பாவூர் பகுதியை சார்ந்தவர் நாதர்ஷா. இவர்கள் இருவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்களின் காதல் விவகாரம் நாதர்aஷாவின் வீட்டிற்கு தெரியவர, அவரது பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, வேறொரு பெண்ணையும் பார்த்து வந்துள்ளனர். 

இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தமிழக - கேரள எல்லைப்பகுதியான உடுமலை காந்தளூர் அடைந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு, நிகிதா தனது கைகளின் நரம்புகளை பிளேடால் அறுத்துள்ளார். 

நிகிலா மயக்கமடையவே, நாதர்ஷா தான் வாங்கி வந்திருந்த மதுவை குடித்துவிட்டு பாறையின் மேல் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். நிகிலா உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதிவாசிகள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த மறையூர் காவல் துறையினர், நிகிலாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் குறித்து உடுமலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Tamilnadu Border Udumalai Forest Kerala Love Couple Suicide Boy Died Woman Treatment at Hospital


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->