பறவைக்காய்ச்சல் எதிரொலி: கேரளா தேசிய பேரிடராக அறிவிப்பு.!
Kerala State Govt Announce Disaster Bird Flu State
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பறவை காய்ச்சல் மனிதர்களையும் தாக்கலாம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலால் அங்குள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள வாத்துகள் அதிகளவு அடுத்தடுத்து இறந்துள்ளது.
இந்நிலையில், பறவைக்காய்ச்சலை மாநில பேரிடராக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் அதிகளவு வாத்துகள் இறந்ததை தொடர்ந்து மாநில பேரிடராக அறிவிப்பதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala State Govt Announce Disaster Bird Flu State