#கேரளா | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய புள்ளி அப்துல் சதார் அதிரடியாக கைது! - Seithipunal
Seithipunal


பயங்கரவாத கும்பலுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மீது பல்வேறு மாநிலங்களில் புகார் எழுந்து வந்தது. மேலும் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

எழுந்த புகார்களின் அடிப்படையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை இணைந்து சோதனை நடத்தி, 350 க்கு மேற்பட்டவர்களை கைது செய்தது.

மேலும், சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்பு, அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்த மத்திய அரசு, 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் இணையதள பக்கத்தையும் மத்திய அரசு முடக்கியது.

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பின் கேரள மாநில பொதுச் செயலாளர் அப்துல் சதார் ஆழாப்புழாவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அப்துல் சதாரிடம், இயக்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala pfi leader arrested now


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->