ஆசை மகனுக்கு திடீர் விபரீதம்.! ஒவ்வொரு ஆண்டும், பெற்றோர் செய்யும் நெகிழ்ச்சி காரியம்.!  - Seithipunal
Seithipunal


கேரளா தம்பதியினர் தங்களுடைய இறந்த குழந்தைக்காக ஒவ்வொரு வருடமும், பிறந்த நாளில் பிறருக்கு உதவி செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றனர். 
 
கேரளா மாநிலத்தில் இருக்கும், கொச்சி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்று 7 ஆண்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.7 ஆண்டுகளாக பல்வேறு பிரார்த்தனை, மருத்துவம் எல்லாம் செய்தும், பலனில்லை. இந்நிலையில், திடீரென 7 வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கின்றது. 

7 வருடங்களுக்கு கழித்து வரமாய் பிறந்த, அந்த குழந்தை தன்னுடைய 7 வது வயதில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்துள்ளது. இதன் காரணமாக துயரத்தின் உச்சியில் இருந்த அந்த தம்பதியினர். தங்களுடைய ஆசை மகனின் ஒவ்வொரு பிறந்த நாள் தினத்திலும், ஏதவாது ஒரு நல்ல காரியம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பர். 

அதுபோல, சமீபத்தில் தங்களுடைய ஆசை மகனின் 20 வது பிறந்த நாளை அந்த தம்பதியினர் கொண்டாடி இருக்கின்றனர். அப்பொழுது, பிறந்த நாள் தினத்தில், 7 ஏழை இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கின்றனர். அந்த தம்பதியினர். மேலும், 2000 பேருக்கு உணவும் வழங்கி இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA PARENTS DONATE FOOD FOR 2000 PEOPLES


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->