பாலக்காட்டில் பேரதிர்ச்சி... காதல் திருமணம் செய்துகொண்ட வாலிபர் கொடூர கொலை..!
Kerala Palakkad Love Married youngster Anish Murder Police Investigation
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு இளமைந்தனம் பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ராதா. இவர்கள் இருவருக்கும் அனிஷ் என்ற 27 வயதுடைய மகன் உள்ள நிலையில், அவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இதே பகுதியை சார்ந்த பிரபு குமார் என்பவரின் மகள் ஹரிதா. அனிஷும், ஹரிதாவும் காதலித்து வந்த நிலையில், இவர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே பலமுறை பிரச்சனை ஏற்பட்ட நிலையில், கடந்த 90 நாட்களுக்கு முன்னதாக காதல் ஜோடி வீட்டினை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்துள்ளனர். பின்னர் பாலக்காடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காவல் நிலையத்தில் ஹரிதா தனது கணவருடன் செல்வேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அனிஷின் குடும்பத்தினருடன் ஹரிதா அனுப்பி வைக்கப்படவே, கணவன் - மனைவியை ஹரிதாவின் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினத்தின் போது அனிஷ் தனது சகோதரருடன் வாகனத்தில் சென்றுள்ளார். இதன்போது ஹரிதாவின் தந்தை பிறப்புகுமார், தாய்மாமா சுரேஷ் இருவரையும் தடுத்து நிறுத்தி, அனிஷை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலக்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபு குமார் மற்றும் சுரேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Palakkad Love Married youngster Anish Murder Police Investigation