13 வயதில் இருந்து பாலியல் தொல்லை.. 40 காமுகன்களால் சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.!
Kerala Malappuram 17 Year Child girl Abused by 40 Culprits Police Investigation
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பாண்டிக்காடு பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, சிறுமியை தாயார் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதன்போது, சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், தனக்கு பாலியல் தொல்லை சிலர் கொடுத்து வருவதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியை விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், சிறுமிக்கு கடந்த 4 வருடங்களாக உறவினர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வந்ததும், 13 வயதில் இருந்து சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதும் அம்பலமானது. மேலும், தொடர் பாலியல் சித்ரவதைகளால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் புகாரை ஏற்று விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில், சிறுமி தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 40 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 20 பேரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள 20 பேரை தேடி வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Malappuram 17 Year Child girl Abused by 40 Culprits Police Investigation