சிறுமிக்கு போதைப்பொருள் பழக்கப்படுத்தி பாலியல் வன்கொடுமை.. 7 காமுகன்கள் அட்டகாசம்.!
Kerala Malappuram 14 year Child girl sexual abuse Addiction of Drugs 2 Arrest 5 Hidden
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தினை சார்ந்த தம்பதிக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், சிறுமி தனது தாய் மற்றும் சகோதரன், பாட்டியுடன் வசித்து வருகிறார்.
கொரோனா காரணமாக சிறுமி வீட்டில் இருந்து வந்த நிலையில், சிறுமியின் தாயுடைய அலைபேசியில் இருக்கும் விளையாட்டை அவ்வப்போது விளையாடி வந்துள்ளார். இதன்போது, இன்ஸ்டாகிராம் உட்பட சில சமூக வலைத்தளத்தையும் உபயோகம் செய்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இருந்த சிறுமியின் உறவினர் மூலமாக சில வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், வாலிபர்கள் தினமும் சிறுமியுடன் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமியை அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
காமுக கூட்டத்தின் நயவஞ்சக விலையில் விழுந்த சிறுமி அங்கு சென்ற நிலையில், சிறுமிக்கு வாலிபர்கள் போதை பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அடிமையாகிய சிறுமி பின்னாளில் வாலிபர்களை தேடி செல்லும் நிலை ஏற்படவே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இவ்வாறாக கடந்த 8 மாதமாக சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிலையில், எடுத்துக்கொண்ட போதை பொருட்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற இடத்தில், தாயிடம் நடந்ததை கூறி கதறியழுதுள்ளார்.
இதனையடுத்து, இது குறித்து காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தனிப்படை அமைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை தேடி வந்தனர்.
இவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியுள்ள 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Malappuram 14 year Child girl sexual abuse Addiction of Drugs 2 Arrest 5 Hidden