#Breaking: கோழிக்கோட்டில் விமான விபத்து.. 191 பயணிகளின் கதி என்ன?..!! - Seithipunal
Seithipunal


துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சறுக்கியதின் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

விமானத்தில் 191 பயணிகள் இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமானம் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்துள்ளது. 

இந்த சமயத்தில், அங்கு விமானம் விபத்திற்குள் சிக்கியுள்ளது. மேலும், கேரள மாநிலத்தில் மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

விமானத்திற்குள் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வந்த விமானம் விபத்திற்குள் சிக்கியுள்ளது. 

இந்த விமானத்திற்குள் தமிழர்கள் உட்பட பிற மாநிலத்தவரும், கேரள மாநிலத்தவரும் இருந்ததாக தகவல் தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Kozhikode Flight Accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->