கேரளாவில் அதிசியம்... நான்கு காதுகளுடைய மாலுக்குட்டி பூனை..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சர்மிளா, இவர்கள் இருவரும் பூனை பிரியர்களாக இருந்து வந்த நிலையில், மாலுகுட்டி என்ற பெயர் கொண்ட கருப்பு நிற பூனையை வளர்த்து வந்துள்ளனர். 

இயல்பாகவே உயிரினங்களுக்கு இரண்டு காதுகள் இருக்கும் நிலையில், மாலுகுட்டிக்கு நான்கு காதுகள் இருந்துள்ளது. மேலும், இரண்டு பெரிய காதுகளும், அதற்குப் பக்கத்தில் சிறிதாக இரண்டு காதுகளும் என வித்தியாசமான தோற்றத்தில் இந்த பூனை காணப்பட்டுள்ளது. 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பூனையை பார்த்து செல்லும் நிலையில், இதற்கு முன்னர் தம்பதிகள் 4 பூனையை வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. எந்த நேரமும் வாகனங்கள் செல்லும் சாலையில் இவர்களின் வீடு அமைந்துள்ளதால், வீட்டுக்கு முன் விளையாடிய 4 பூனைகளும் வாகனங்களில் மோதி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. இதனையடுத்து தற்போது மாலுகுட்டி பூனையை தம்பதிகள் பத்திரமாக பார்த்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Kozhikode 4 Ears Cat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->