22 நாட்கள்.. பெண்ணை அடைத்து வைத்து மிளகாய்பொடி, வெந்நீர் ஊற்றி பாலியல் சித்ரவதை செய்த காமுகன்.. லிவிங் டுகெதர் கேடுகள்.!
Kerala Kochi Youngster House Arrest Young girl and Sexual Torture Police Investigation 11 June 2021
கேரள மாநிலத்தில் உள்ள கன்னூர் மாவட்டத்தை சார்ந்த 27 வயது இளம்பெண், பேஷன் டிசைனிங் துறையில் பணியாற்றி வருகிறார். பெண்மணிக்கும் - திருச்சூர் மாவட்டத்தை சார்ந்த பங்குச்சந்தை தொழிலதிபர் மார்ட்டின் ஜோசப் (வயது 33) என்பவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த ஊரடங்கில் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். கொச்சியில் இருக்கும் வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மார்ட்டின் ஜோசப் பெண்ணை கடுமையாக தாக்கவே, கடந்த மாதம் மார்டினை பிரிந்து சென்ற பெண்மணி சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண்ணின் வீட்டிற்கு சென்ற மார்ட்டின், தன்னுடன் வரவில்லை என்றால் என்னுடன் நீ எடுத்த நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறான்.
இதனால் பயந்துபோன பெண்மணி கொச்சிக்கு மார்டினுடன் திரும்பி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறான். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை பெண்ணை பாலியல் ரீதியாக கடுமையாக துன்புறுத்தி இருக்கிறான். அவனது வீட்டில் இருந்து எப்படியோ தப்பி சென்ற பெண்மணி காவல் நிலையத்தில் விஷயத்தை கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்ததால், ஏப்ரல் 8 ஆம் தேதி மார்ட்டின் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
புகாரில், மார்ட்டின் பங்குசந்தையில் மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் பெற்று தருவதாக கூறி, ரூ.5 இலட்சம் வரை வாங்கி பணம் தரவில்லை. அவனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருக்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தினான். என்னை கொலை செய்வதாகவும் மிரட்டுகிறான்.
அவன் என்னை அடைத்து வைத்த 22 நாட்களும் தினமும் கண்களில் மிளகாய் பொடி தூவி நான் துடிப்பதை பார்த்து ரசிப்பான். என் உடலில் வெந்நீரை ஊற்றி, நான் கதறுவதை திரைப்பட சைக்கோ போல பார்த்து ரசித்தான். அவனை கைது செய்யாமல் விட்டுவிட்டால் பெரும் சைக்கோ கொலைகாரனை உருவாகுவான். நான் பாதிக்கப்பட்டுவிட்டேன். பிற பெண்களை காப்பாற்ற அவனை கைது செய்யுங்கள் " என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து மார்டினை கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala Kochi Youngster House Arrest Young girl and Sexual Torture Police Investigation 11 June 2021